இன்று இரவு NDTV-HINDU!? டீவியில் byte it என்ற நிகழ்ச்சியில் நண்பரும், பதிவருமான அண்ணன் வடிவேலன் அவர்களின் பேட்டி வருகிறது, அண்ணாரின் கணிபொறி மென்பொருள்களின் கூடம் என்ற வலைப்பதிவு இந்த அளவுக்கு உயர்ந்துள்ளதற்கு அவரின் உழைப்பே காரணம், அவரை மேலும் உயர வாழ்த்துவோம்
********
வரும் இருபதாம் தேதி(20.12.09) ஞாயிற்றுகிழமை, ஈரோட்டில் மீண்டும் ஒரு மாபெரும் சந்திப்பு நடந்த உள்ளோம், சென்ற முறை நடந்த சந்திப்பில் மேடியின் திருமணம் மிக முக்கிய காரணமாக இருந்தது, பல நண்பர்களுக்கு மேடியும்டன் நேரடி அறிமுகமில்லாமல் வர தயங்கியதாக தெரிகிறது, அதனால் இம்முறை பதிவர்களோடு மட்டுமல்லாமல் வாசகர்களுக்கும் சேர்த்து அழைப்பு விடப்படுகிறது!, பரஸ்பர அறிமுகம், ஒருவருகொருவர் உதவியாய்யிருத்தல், ப்ளாக்கர் பற்றிய சந்தேகங்கள், சமூக உதவி, எழுதும் முன் இருக்கும் தயக்கத்தை போக்குதல் போன்றவை முக்கிய விடயங்களாக பேசப்படும்!
இந்த முறை முழு பொறுப்பையும் அண்ணன் கதிர் ஏற்றுள்ளார், அதனால் தைரியமாக வரலாம்! வரும் முன் முன்னஞ்சலிலோ, தொலைபேசியிலோ ஒரு முறை தொடர்பு கொண்டு உறுதி செய்து கொள்ளவும்!
வால்பையன்:9994500540
ஈரோடு கதிர்:9842786026
வெளீயூர் பதிவர்களுக்கு சிறப்பு சிகப்பு கம்பள வரவேற்பு உண்டு!
*********
போன பதிவை பற்றி பேச தோழர் கும்க்கிக்கு நேற்று மதியம் அழைத்திருந்தேன், அம்மாதிரியான தலைப்புகளில் அவருக்கு ஆர்வம் அதிகம், பேசி கொண்டிருந்தபோதே சாப்பாட்டு அயிட்டங்களும், முன் வந்து விட்டது, என்ன குழம்பு என கேட்க, ரசம் என்றார் தங்கமணி, கரண்டியை உள்ளே விட்டு கலக்கும் போது அடர் மஞ்சள் வண்ணத்தில் ஆனது, என்ன ரசம் என்றேன், கொள்ளுரசம் என்றார், சரி நேரில் பாராட்டினால் முகஸ்துதி என்ற நினைத்து கொள்வார் என்று போனிலேயே கும்கியிடம் என் மனைவி வைத்த ரசம் அப்படியே சாம்பார் மாதிரி இருக்குது என்றேன், அடத்து நொடி ரசக்கரண்டி என் மண்டையில் ”நச்” என்று இடித்தது, என்னாம்மா உன்னை புகழ்ந்து தானே பேசிகிட்டு இருக்கேன் என்றேன், உண்மையை சொல், என் ரசம், சாம்பார் மாதிரி நல்லாயிருக்குன்னு சொல்றியா இல்லை நான் வைக்கிற சாம்பார், ரசம் மாதிரி இருக்குதுன்னு கிண்டல் பண்றியா என்கிறார்.
ரங்கமணிகளுக்கு விடிவுகாலமே இல்லையா! இப்படியே போனா இதுக்கு என்ன தான் முடிவு! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
*********
2012
புதுசா சொல்ல ஒண்ணுமில்லை, தங்கமணியின் வற்புறுத்தலினால் போய் அமர்ந்தேன், கிராபிக்ஸ் ,கிராபிக்ஸ் மீண்டும் அதே. இமயமலை பகுதியை சீனாவாக காட்டி அரசியல் செய்ததாக சிலர் சொல்லியிருந்தனர், இயமலையின் அந்த(பின்) பக்கம் யாருக்கு சொந்தம் என்று எனக்கு தெரியவில்லை, அதுவும் நமக்கு தான் சொந்தமா!?
கடைசி கப்பல் ஆபத்தில் சிக்க காரணமாக இருப்பது நாயகன் மற்று குரூப், ஆனால் அந்த சிக்கலை அவரே தீர்த்து வைக்க, என்னவோ அழிந்து கொண்டிருக்கும் மொத்த உலகத்தையும் காப்பாற்றியது போல் ஒருவருகொருவர் முத்தம் கொடுத்து, செண்டி”மெண்டல்” தனம் எல்லா பக்கமும் தான் இருக்கு!
**********
நான் எந்த டாஸ்மாக் பாருக்கு போனாலும் வாட்டர் பாக்கெட் வாங்க மாட்டேன், என்ன ஆனாலும் வாட்டர் பாட்டில் தான், போன வாரம் தண்ணீர் கிடைக்காமல் லோக்கல் தண்ணிர் ஊற்றி சரக்கு அடுத்து தொண்டையில் கரகரப்பு, மூக்கடைப்பு, ஒரே தும்மல்!
இதிலிருந்து தெரிவது என்னவென்றால், அடிக்கும் சரக்கு மட்டும் பிரச்சனையில்லை, கலக்கும் தண்ணீரும் பிரச்சனை!
*********
********
டிஸ்கி:குவியல் தான், பெயர் மாற்றி!








